யாகப் பூக்கள் ... அழாதேடா செல்லம் ! இன்னுமொரு முத்தம் ! அதோ கேளு மணிச் சத்தம் ! மத்தியானம் வர்றேண்டா ! மடியில வச்சிக்கிறேண்டா ! படிச்சி களைச்ச பச்சப் புள்ளைக்கு ! பால் சோறு தர்றேண்டா ! என்று சொன்ன அம்மா பேச்சைக் கேட்டு, நடையில் வேகம் தளர விட்டு, திரும்பி திரும்பி பார்த்து விட்டு, பிஞ்சுக் கையை அசைத்து விட்டு, உள்ளே போன பிள்ளை கண்டு, கடந்து சென்றால் கணத்த இதயத்தில் தாய் ! நேரம் மெல்லச் செல்லச் செல்ல, மூக்கில் புகையும் ஏற ஏற, இருமி இருமிக் களைத்த பிள்ளை, " ம்மா ... ம்மா ... " எங்கே நீ போனாயோ ? என்னைத்தான் விட்டு விட்டு ! கண்ணுந்தான் எரிச்சலாச்சே ! காரணந்தான் நெருப்பாச்சே ! கதறல்கள் காலியாச்சே ! கைப்பிடித்த தோழியுந்தான் கரித் தூசியாச்சே ! இதோ வர்றேன்னு போனவளே ! சொல்லக் கூட நேரமில்லை ! தீப்பசிக்கு தின்னு தீக்க, எந்தேகம் கிடைச்சிருச்சே ! எங்கேம்மா நீ போன .....