Skip to main content

காலத்தை வென்றவள் 


உன்
விழிகள் கொய்த,

என்
கடந்த காலத்தைக்
கொடுத்து விடு !

உன்
வார்த்தைகள்
விழுங்கிய ,

என்
வருங்காலத்தைக்
கொடுத்து விடு !

உன்
சிரிப்பு சீரழித்துக்
கொண்டிருக்கும்,

நிகழ் 
காலத்தைக்
கொடுத்து விடு !

எனது
முக்காலத்தையும்
வென்றவள் !

முழுங்கி விட்டு
முனகல் வேறு,

நான்
முட்டாள் என்று !

எக்காலத்திலுமின்றி
எக்காளமாயிருக்கிறேன்,

எப்பொழுதும்
என்னெதிரில்
நீ
இருப்பாய்
என்ற நம்பிக்கையில் !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !