காலத்தை வென்றவள்
உன்
விழிகள் கொய்த,
என்
கடந்த காலத்தைக்
கொடுத்து விடு !
உன்
வார்த்தைகள்
விழுங்கிய ,
என்
வருங்காலத்தைக்
கொடுத்து விடு !
உன்
சிரிப்பு சீரழித்துக்
கொண்டிருக்கும்,
நிகழ்
காலத்தைக்
கொடுத்து விடு !
எனது
முக்காலத்தையும்
வென்றவள் !
முழுங்கி விட்டு
முனகல் வேறு,
நான்
முட்டாள் என்று !
எக்காலத்திலுமின்றி
எக்காளமாயிருக்கிறேன்,
எப்பொழுதும்
என்னெதிரில்
நீ
இருப்பாய்
என்ற நம்பிக்கையில் !
Comments
Post a Comment