Skip to main content

Posts

Showing posts from November, 2013
செம்மொழி  என் தாய்மொழி ! அது என்றும் செம்மொழி ! உன் செக்கச் சிவந்த உதட்டில் உயிர்க்கும் மொழி ! என் தாய்மொழி ! என்றும் செம்மொழி !
அர்த்தமென்ன ? உன் உணர்வுகளோடும் உதிரத்தோடும் கலந்த என்னை , உற்ற தோழி சொன்னாலென்று , உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்து விட்டாய்  என்னை ... எதிரெதிரேப் பார்த்தாலும் , உன் பத்ரகாளிப்  பார்வையில் பஸ்பமாகிறேன் நான் ! கண்டும் காணாத உன்  போக்கில் , உண்டு உறங்க மறக்கிறேன் நான் ! உன் உணர்வு பரிமாற்ற மறுப்பில் என் உயிர் வலியை - நான் எப்படி உணர்த்த ? மீண்டும் ஒருமுறை  வாய்ப்பு கொடு , உன்னோடு வாழ அல்ல ! நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்று கேட்க !
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !