அர்த்தமென்ன ? உன் உணர்வுகளோடும் உதிரத்தோடும் கலந்த என்னை , உற்ற தோழி சொன்னாலென்று , உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்து விட்டாய் என்னை ... எதிரெதிரேப் பார்த்தாலும் , உன் பத்ரகாளிப் பார்வையில் பஸ்பமாகிறேன் நான் ! கண்டும் காணாத உன் போக்கில் , உண்டு உறங்க மறக்கிறேன் நான் ! உன் உணர்வு பரிமாற்ற மறுப்பில் என் உயிர் வலியை - நான் எப்படி உணர்த்த ? மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடு , உன்னோடு வாழ அல்ல ! நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்று கேட்க !