அர்த்தமென்ன ?
உன்உணர்வுகளோடும்
உதிரத்தோடும்
கலந்த என்னை ,
உற்ற தோழி
சொன்னாலென்று ,
உள்ளத்திலிருந்து
எடுத்தெறிந்து விட்டாய்
என்னை ...
எதிரெதிரேப் பார்த்தாலும் ,
உன்
பத்ரகாளிப் பார்வையில்
பஸ்பமாகிறேன் நான் !
கண்டும் காணாத
உன் போக்கில் ,
உண்டு உறங்க
மறக்கிறேன் நான் !
உன்
உணர்வு பரிமாற்ற
மறுப்பில்
என்
உயிர் வலியை - நான்
எப்படி உணர்த்த ?
மீண்டும்
ஒருமுறை
வாய்ப்பு கொடு ,
உன்னோடு
வாழ அல்ல !
நாம்
வாழ்ந்த வாழ்வின்
அர்த்தம் என்ன
என்று கேட்க !
Comments
Post a Comment