நன்றிக் கடன்
நான் சுவாசித்த
என் பெண் மனமே !
உன்னால்
வஞ்சிக்கப்பட்ட இதயம்
ஒன்று
வாழத் துடிக்கிறது !
உன்னால்
அனாதையாக்கப்பட்ட என்
ஆழ்மனம் - இன்று
ஆளத் துடிக்கிறது !
உன்னால்
கைவிடப்பட்ட என்
கனவுகள் - இன்று
முற்றுகையிடப்படுகிறது !
உன்னால்
உழன்று கொண்டிருந்த
என் வாழ்க்கைச் சக்கரம்
வெற்றி ஓட்டத்திற்கான
வரம் பெற்றிருக்கிறது !
எப்படி தெரியுமா ?
எனக்குத் திருமணம்
அய்யோ பாவம்
யார் அந்த மங்கை ?
என் மனதிற்கு
ஈடு செய்வாளா ?
ஏனெனில் அவள்
எனக்காய்
தினமும் அழ வேண்டும் !
எனக்காய்
தினமும் குமுற வேண்டும் !
எனக்காய்
தினமும் வருந்த வேண்டும் !
எனக்காய்
தினமும் என்னோடு
சண்டையிட வேண்டும் !
எனக்காய்
தினமும் என்னால்
பித்துப் பிடித்தவள் போல்
சத்தியமாக மாற வேண்டும் !
எனக்காய்
எப்போதும் என்னை
எதிர் பார்த்திருக்க வேண்டும் !
எனக்காய்
மனதுக்குள்
கதறிக் கரைய வேண்டும் !
எனக்காய்
நொடிப் பிரிவும்
முடியாத செயலாய்
முனக வேண்டும் !
இவை அனைத்தும்
சுய நலமில்லை
பழிவாங்கும்
படலமும் இல்லை - எனது
பாசப் பகிர்ந்தளிப்பில்
என் பத்தினியின்
பரவச நிலைகள் !
என் அன்பின்
ஊற்றுகள்
அனைத்தும்
அடங்கும் வேளையில்,
மீண்டும் இதே
மண்ணில் நான்
கருவாக வேண்டும் !
அதையும் அவளே
தாங்க வேண்டும் !
Comments
Post a Comment