இன்னொரு அறிமுகம்
அட !
எங்கேயோ பார்த்த முகம்
இவனென்று
எண்ணத் தோன்றுகிறதா ?
எப்போதோ
சுவைத்த இதயத்தின்
இனிமை
இப்போது உன்
நினைவில் வருகின்றதா ?
உன்
பத்தினிச் சிரிப்பில்
பற்றி எரிந்து,
சத்தியமாய்ச்
சாம்பலாகிப் போன, என்
இதயத் துகள்களை
நுகர முடிகிறதா ?
கள்ளிப்பால் குடித்த
குழந்தை போல், உன்
காதலிப்பால்
கரைந்த, என்
உயிரின் கதறல்
கேட்கிறதா ?
நான் தானடி!
நீ சிதறிய
பார்வையில் சிக்கியவர்களில்
சீனியர் நான் !
என் வாழ்க்கை
உன்னோடு என்று, நீ
உளறிய வார்த்தைகளில்
உருகியவன் நான் !
உன்
ஞாபகங்களில்
ஞானியானவன் நான் !
பொய்களைக் கடந்து
மெய்களை மறந்து
எதையும் நம்ப
மறுப்பவன் நான் !
முன்னாளில் உன்
காதலனாய்,
இந்நாளில், என்
முகவரி
தொலைத்தவனாய் ...
அட !
எங்கேயோ
பார்த்த முகம்
இவனென்று இப்போது
தெரிகிறதா ?
சீனியர் நான் !
என் வாழ்க்கை
உன்னோடு என்று, நீ
உளறிய வார்த்தைகளில்
உருகியவன் நான் !
உன்
ஞாபகங்களில்
ஞானியானவன் நான் !
பொய்களைக் கடந்து
மெய்களை மறந்து
எதையும் நம்ப
மறுப்பவன் நான் !
முன்னாளில் உன்
காதலனாய்,
இந்நாளில், என்
முகவரி
தொலைத்தவனாய் ...
அட !
எங்கேயோ
பார்த்த முகம்
இவனென்று இப்போது
தெரிகிறதா ?
Comments
Post a Comment