களை
அட !
நன்றி
கெட்டவனே !
நான்
பெத்த
மகனே !
என்னில்
இருந்து
எடுக்கப்பட்டவனே !
என்னையா !
எடுத்தெறிந்து விட்டுப்
போகிறாய் !
முதியோர் இல்லத்தில் !
பதிலாக,
இடுகாட்டில் சுட்டு
பிடி சாம்பலாக்கியிருக்கலாம் !
இந்தக்
கட்டையாவது
வெந்திருக்கும் !
என்
காலமாவது
முடிந்திருக்கும் !
ஆனால்,
குடும்பத்திலிருந்து
பிள்ளைகள்
பிடுங்கி எறிந்த
பெற்றவர்களின் கூட்டத்தில் ,
உன்
தாயுள்ளம்
ஒரு
களையாக
ஒரு நாளும் வாழாது !
நீ
வீடு போய்
சேருமுன்,
என் உயிர் ...
Comments
Post a Comment