Skip to main content

களை


அட !
நன்றி
கெட்டவனே !

நான்
பெத்த
மகனே !

என்னில்
இருந்து
எடுக்கப்பட்டவனே !

என்னையா !
எடுத்தெறிந்து விட்டுப்
போகிறாய் !
முதியோர் இல்லத்தில் !

பதிலாக,
இடுகாட்டில் சுட்டு
பிடி சாம்பலாக்கியிருக்கலாம் !

இந்தக்
கட்டையாவது
வெந்திருக்கும் !

என்
காலமாவது
முடிந்திருக்கும் !

ஆனால்,
குடும்பத்திலிருந்து
பிள்ளைகள்
பிடுங்கி எறிந்த
பெற்றவர்களின் கூட்டத்தில் ,

உன்
தாயுள்ளம்
ஒரு
களையாக
ஒரு நாளும் வாழாது !

நீ
வீடு போய்
சேருமுன்,
என் உயிர் ...






Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !