Skip to main content

அப்பா

நன்றி அப்பா !
எப்போதாவது 
யாரிடமாவது 
அறிமுகப்படுத்தும் போது மட்டும் 
என்னோடு 
பேசுவதற்கு ...

நன்றி அப்பா !
முதன் முதலாய் 
பிறந்ததால் 
மூத்தவள் என்று 
முடிசூட்டி, என்னை 
மூலையில் 
முடக்கி வைத்ததற்கு ...

நன்றி அப்பா !
இளையவள் பிறந்த பின்பு 
இல்லத்தில் ஏற்றம்  என்று 
என் தங்கைக்கு மட்டும் 
சிவப்புக் கம்பளம் 
விரித்ததற்கு ...

நன்றி அப்பா !
முழுமையான பெண்ணாக 
நான் மலரும் போது 
முனகிய படியே என் 
கனவுகளுக்கு 
முற்றுப்புள்ளி வைத்ததற்கு ...

ஆனால் அப்பா !
எனக்குள் சில 
ஆதங்கம் ...

சரியான நேரத்தில் 
முறையாக எனக்கு 
போலியோ 
போடப்பட்டிருந்தால் ...

கைகளை ஊன்றி 
உடலை இழுத்து 
இழுத்து 
இடம்பெயரும் , நிலை எனக்கு 
இல்லாமல் போயிருந்தால் ...

என் 
ஊனம் கண்டு 
உள்ளத்தில் எரிந்து 
உங்கள் உதடுகள், என் 
உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள் 
உதிர்க்காமல் 
இருந்திருந்தால் ...

சரிந்த என் 
உடையைச் 
சரிசெய்ய 
இன்னொருவர் தேவை 
எனக்கு இல்லாது போயிருந்தால் ...

அப்பா !
உங்கள் 
ஏற்றப் பாதையில் நான் 
இடம் பெறா விட்டாலும் ...

தளர்ந்து தலை சாய்க்கும் போது 
தாங்கும் மடியாய் 
நான் இருப்பேன் 
அப்பா !

Comments

Popular posts from this blog

நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?