Skip to main content

அப்பா

நன்றி அப்பா !
எப்போதாவது 
யாரிடமாவது 
அறிமுகப்படுத்தும் போது மட்டும் 
என்னோடு 
பேசுவதற்கு ...

நன்றி அப்பா !
முதன் முதலாய் 
பிறந்ததால் 
மூத்தவள் என்று 
முடிசூட்டி, என்னை 
மூலையில் 
முடக்கி வைத்ததற்கு ...

நன்றி அப்பா !
இளையவள் பிறந்த பின்பு 
இல்லத்தில் ஏற்றம்  என்று 
என் தங்கைக்கு மட்டும் 
சிவப்புக் கம்பளம் 
விரித்ததற்கு ...

நன்றி அப்பா !
முழுமையான பெண்ணாக 
நான் மலரும் போது 
முனகிய படியே என் 
கனவுகளுக்கு 
முற்றுப்புள்ளி வைத்ததற்கு ...

ஆனால் அப்பா !
எனக்குள் சில 
ஆதங்கம் ...

சரியான நேரத்தில் 
முறையாக எனக்கு 
போலியோ 
போடப்பட்டிருந்தால் ...

கைகளை ஊன்றி 
உடலை இழுத்து 
இழுத்து 
இடம்பெயரும் , நிலை எனக்கு 
இல்லாமல் போயிருந்தால் ...

என் 
ஊனம் கண்டு 
உள்ளத்தில் எரிந்து 
உங்கள் உதடுகள், என் 
உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள் 
உதிர்க்காமல் 
இருந்திருந்தால் ...

சரிந்த என் 
உடையைச் 
சரிசெய்ய 
இன்னொருவர் தேவை 
எனக்கு இல்லாது போயிருந்தால் ...

அப்பா !
உங்கள் 
ஏற்றப் பாதையில் நான் 
இடம் பெறா விட்டாலும் ...

தளர்ந்து தலை சாய்க்கும் போது 
தாங்கும் மடியாய் 
நான் இருப்பேன் 
அப்பா !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !