Skip to main content

சிரிக்கிறேன்

கொஞ்ச நாள் 
பழக்கம் 
கொண்டு வந்த 
வழக்கம் 
எதிரே பார்த்தால் 
யதார்த்தமாய் 
சிரிப்போமென்று !

எத்தனையோ முறை 
உன் எதிரில் நான் 
உன்னைக் 
கடக்கும் பொழுது 
சிரித்தாய் ,
நானும் சிரித்திருக்கிறேன் !

கை அசைத்தாய்,
நானும் 
கை அசைத்திருக்கிறேன் !

'நில்' என்று 
சைகை செய்வாய் 
நானும் 
நின்றிருக்கிறேன் !

'பேசு' என்று 
கண்களால் கெஞ்சுவாய் !
நானும் 
கொலையுண்டிருக்கிறேன் !

"என் இறுதிவரை 
என் கண்களுக்குள் 
நீ தான் 
நிறைந்திருக்க வேண்டும் "
என்றாய் !
பயந்தேன்,
பதறினேன்,
பதில் சொல்லி 
அவகாசம் கேட்டேன் !

உன் பூமுகம் கண்ணீர்ப் 
பொய்கையில் 
மூழ்குவது 
சகிக்காமல் 
கிளம்பினேன் !

மறுநாள் 
இதோ தூரத்திலே 
என்னைப் 
பார்த்து விட்டாய் !

என்னுள் நீ 
உதிர்த்த 
உணர்வுகளுக்கு எல்லாம் 
"உயிர் கொடு"
என்று 
உன்னிடம் 
கேட்க வந்தேன் !

ஆனால் உன் 
கண்களில் எனைப் 
பார்த்ததும் 
ஒளி விடும் 
பிரகாசம் இல்லை !

முகத்தில் எந்தச் 
சலனமும் இல்லை !

கூப்பிடலாமா என
நினைக்கும் போது 
கண்டும் காணாமல் 
உன் கண்கள் 
உன் முகத்தை 
வேறு பக்கம் 
திருப்பியதை எண்ணிச் 
சிரித்தேன் ! 

கானலாய் இருந்த 
உணர்வுகளுக்கெல்லாம் 
நீ தான் காரணம் 
என நான் 
நினைத்ததை எண்ணிச் 
சிரிக்கிறேன் ! சிரிக்கிறேன் !

நீ ஊட்டிய 
உணர்வுகள் எல்லாம் 
உண்மை என்று 
உயிர் வளர்த்த இந்த 
உடலை எண்ணிச் 
சிரிக்கிறேன் !

இந்தப்  பாதையில், என் 
இதயம் பயணிப்பது 
இதுவே இறுதிமுறை என 
முடிவு கட்டிச் சிரிக்கிறேன் !


Comments

Popular posts from this blog

நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
அப்பா நன்றி அப்பா ! எப்போதாவது  யாரிடமாவது  அறிமுகப்படுத்தும் போது மட்டும்  என்னோடு  பேசுவதற்கு ... நன்றி அப்பா ! முதன் முதலாய்  பிறந்ததால்  மூத்தவள் என்று  முடிசூட்டி, என்னை  மூலையில்  முடக்கி வைத்ததற்கு ... நன்றி அப்பா ! இளையவள் பிறந்த பின்பு  இல்லத்தில் ஏற்றம்  என்று  என் தங்கைக்கு மட்டும்  சிவப்புக் கம்பளம்  விரித்ததற்கு ... நன்றி அப்பா ! முழுமையான பெண்ணாக  நான் மலரும் போது  முனகிய படியே என்  கனவுகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்ததற்கு ... ஆனால் அப்பா ! எனக்குள் சில  ஆதங்கம் ... சரியான நேரத்தில்  முறையாக எனக்கு  போலியோ  போடப்பட்டிருந்தால் ... கைகளை ஊன்றி  உடலை இழுத்து  இழுத்து  இடம்பெயரும் , நிலை எனக்கு  இல்லாமல் போயிருந்தால் ... என்  ஊனம் கண்டு  உள்ளத்தில் எரிந்து  உங்கள் உதடுகள், என்  உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்  உதிர்க்காமல்  ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?