நீதான்னு ...
காஞ்சிபுரம் கருவாச்சி,
பார்த்து ரொம்ப நாளாச்சி,
கோபப்படும் குட்டச்சி,
கோவிச்சிப் போனா என்னாச்சி,
நானும் இனி உங்கட்சி,
வேணாமடி அழுகாச்சி,
கண்ண உருட்டி காமிச்சி - நீ
சொன்ன காதல் என்னாச்சி,
நல்ல காலம் வந்தாச்சி,
நாலு காசும் பார்த்தாச்சி,
பந்தக் காலும் போட்டாச்சி,
பத்துப் பேரும் வந்தாச்சி,
ஊர் மயங்கி நின்னுருச்சி,
மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி,
கையி ரெண்டும் கோர்த்தாச்சி,
கழுத்துல தாலி ஏறிடுச்சி,
படுக்கையும் விரிச்சாச்சி,
பன்னீரும் தெளிச்சாச்சி,
அதுக்குள்ள !
சூரியந்தான் வந்திருச்சி,
முகத்துல தான் சுட்டுருச்சி,
கண் முழிச்சி பார்த்தாக்க !
கனவுன்னு ஆயிருச்சி,
கனவாகிப் போனதால
கண்ணீரு கொட்டிருச்சி,
நெஞ்சுக் குழி அடிச்சிக்கிச்சு,
எனக்கு
நீதான்னு சொல்லிருச்சி !
Comments
Post a Comment