நாளை
சிந்தனையைச்
சீரழிக்கும்
சிரிப்புக்குச் சொந்தக்காரி !
வெண்கடலில்
கரு முத்தைக்
காட்டி மிரட்டும்
கெட்டிக்காரி !
கனலாய் வார்த்தை
உமிழ்ந்து, என்
கண்ணீரில் தாகம்
தீர்க்கும் உளவுக்காரி !
என்
ஆன்மாவை
அமைதியாய்
உறிஞ்சிய உரிமைக்காரி !
வாழ்வில்
சூரியனாய் எழுந்தவனை
சருகாக்கி சங்கடப்படுத்திய
சாகசக்காரி !
என் இதயத்தை
இரு கூறாக்கி, நீ
இட்ட நெருப்பு
இனி எரியும்
நாளைமுதல் உனக்குள் !
Comments
Post a Comment