Skip to main content

ஆளப்பிறந்தவன் 

[ எனக்கும், கடலுக்கும் நடந்த உரையாடல் இது ]

நெடுநாளாய் வீழ்ந்து கிடந்த 
நீர்ப்பிணம் ஒன்றின் 
நீண்ட மணல் வெளியில்,
நெஞ்சம் சுமந்த 
நினைவுகளை எல்லாம்,
நிழற்படமாய் 
மனதுக்குள் சுவாசித்துக் 
கொண்டிருந்தேன் !

மேகத்தில் துளியில்லை,
வானம் முழங்கவில்லை,
வெள்ளிக் கம்பிகள் 
திரிக்கப்படவில்லை,
குளிர் காற்றும் என்னைக் 
குடிக்கவில்லை, ஆனாலும் 
நனைகிறேன் நான் !

திரும்பிப் பார்த்தேன்,
திகைத்தேன் !
என் உயரத்திற்கு 
நீர் எழும்பி,
என்னை நனைத்துச் 
சிரித்தபடி கேட்டது,
'என்னை யார் ?' - என்று  
'அகிலம் ஆளப்பிறந்தவன் 
நான்' எனக்கூறி,
என் அடி தொழுது 
நிற்கும் நீ யார் ?
எனக் கேட்டேன் !

என்னிடம் 
விடை எதிர்பார்த்திருந்த 
நீர்ப்பிணம், என் 
எதிர் வினாவினால் 
எரிச்சலுற்றது !
நீர் வரிசைகளால் 
என்னை அடித்தது !

இரைச்சலுடன் உயரே எழுந்து 
என்மேல் மோதி வீழ்ந்தது !
வீழ்ச்சியைத் தன் பயத்தால் மறைத்து,
"நான் ஓர் நீர்ப்புரட்சி;
என் பெயர் கடல் " என்றது !

என் பார்வை 
அதன் மேல் கூர்மையானதும் 
தொடர்ந்து கூறியது,
"ஆழத்தை 
அடிமைப்படுத்தியவன் 
நான் !"

கோடான கோடி 
உயிர்களைச் 
சுமக்கிறவன் நான் !
என் பசிக்கு 
பல உயிர்களை 
பலி கொண்டவன் நான் !
வானவில்லையும் 
வளைத்துப் போடும் 
வல்லமை பெற்றவன் நான் !
அதிசயங்களின் 
ஆச்சர்யம் நான் !
என்னுள் அள்ளிச் செல்ல 
செல்வங்கள் ஏராளம் !
என்னைப் புரிந்து கொண்டால் 
நான் ஓர் உளவு !
புரிய மறுத்தால் 
அவர்கள் என் கனவு !
எனச் சொல்லிக் கொண்டே 
நீரை வாரி இறைத்தது 
மீண்டும் ஓர்  ஏலனச்சிரிப்போடு !
இப்போது கேட்டது 
மீண்டும் 'நான் யார்' என்று 
ஆணவத்தில் ஆர்ப்பரித்துத் 
துள்ளும் கடலைக் கண்டு 
சொல்லத் துவங்கினேன் 
நான் யாரென்று !

படைத்தவன் பார்த்து ரசிக்க 
பல உயிர்களை இரட்சிக்கப் 
பிறந்தவன் நான் !
என்னை எனக்குள் சென்று 
நான் யார் என்று, என்னால் 
தெரிந்து கொள்ளும் 
ஆற்றல் படைத்தவன் நான் !
ஆழத்தை அடிமைப்படுதியவனே !
உன் ஆழம் அளக்க 
அளவுகோல் கண்டவன் நான் !
உன் பசிக்கு, பல 
உயிர்களை படைப்பவன் நான் !
உன்னுள் இறங்கி 
உன்னைக் கொள்ளையடிக்கும் 
திறன் பெற்றவன் நான் !

இரகசியங்களை மொத்தமாக 
வைத்துள்ள உனக்குள் 
இறங்கும் நான், எந்த 
இரகசியமும் இல்லாதவன்,
படைத்த பரம்பொருள் 
அனுபவிக்கத் தெரிந்தவன் நான்,
பார்க்கும் இடமெல்லாம், என் 
முத்திரைப் பதிக்கத் 
தெரிந்தவன் நான்,
இருந்த இடத்தில் 
இருந்து நகர 
முயற்சி மட்டும் 
செய்பவன் நீ !

எங்கும் 
எளிதில் நகரத் 
தெரிந்தவன் நான் !
"என் பெயர் மனிதன்"
எனச் சொல்லி 
முடிக்கும் வேளையில்,
ஆர்ப்பாட்டம் தவிர்த்து,
ஆணவம் தவிர்த்து,
அமைதியாய் என் 
பாதம் கழுவிச் சென்றது 
கடல் !




 



Comments

Popular posts from this blog

நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
அப்பா நன்றி அப்பா ! எப்போதாவது  யாரிடமாவது  அறிமுகப்படுத்தும் போது மட்டும்  என்னோடு  பேசுவதற்கு ... நன்றி அப்பா ! முதன் முதலாய்  பிறந்ததால்  மூத்தவள் என்று  முடிசூட்டி, என்னை  மூலையில்  முடக்கி வைத்ததற்கு ... நன்றி அப்பா ! இளையவள் பிறந்த பின்பு  இல்லத்தில் ஏற்றம்  என்று  என் தங்கைக்கு மட்டும்  சிவப்புக் கம்பளம்  விரித்ததற்கு ... நன்றி அப்பா ! முழுமையான பெண்ணாக  நான் மலரும் போது  முனகிய படியே என்  கனவுகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்ததற்கு ... ஆனால் அப்பா ! எனக்குள் சில  ஆதங்கம் ... சரியான நேரத்தில்  முறையாக எனக்கு  போலியோ  போடப்பட்டிருந்தால் ... கைகளை ஊன்றி  உடலை இழுத்து  இழுத்து  இடம்பெயரும் , நிலை எனக்கு  இல்லாமல் போயிருந்தால் ... என்  ஊனம் கண்டு  உள்ளத்தில் எரிந்து  உங்கள் உதடுகள், என்  உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்  உதிர்க்காமல்  ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?