எங்களால் ...
உறங்காத விழிகளால்
ஊமை மொழி பேசி, இரு
உள்ளங்கள் கசிந்துருகி,
உண்மையான நேசம்
உறுதிப்படும் போது
ஊனமாக்கப்படுகிறது ஜாதி !
தாயை மறந்து
தாரத்தை மறந்து
தன் பிள்ளையை மறந்து
தன்னலத்தையும் மறந்து
தாய்நாடு காக்க
தளராத உள்ளங்கள்
இணையும் போது
இறந்து விடுகிறது ஜாதி !
குறிஞ்சி மலராய் பூத்து
நெஞ்சு நெகிழ
கொஞ்சி விளையாடும்
பிஞ்சு உள்ளங்கள்
ஒன்றினையும் போது
கொன்று அழிக்கப்படுகிறது ஜாதி !
ஊமையாய் இருந்து
உயிர் பறித்தும்,
நாவில் நடனமாடி
நாட்டை தொலைத்தும்,
கையில் ஒரு கருவியாகி
காண்போரைக் கொன்றும்,
யுத்தங்கள் பல கண்டு
ரத்தக்கறை படிந்த ஜாதி,
இமையத்துக்கப்பால்
எடுத்தெறியப்படும்
இனி எங்களால் !
Comments
Post a Comment