யாகப் பூக்கள் ...
அழாதேடா
செல்லம் !
இன்னுமொரு
முத்தம் !
அதோ
கேளு மணிச்
சத்தம் !
மத்தியானம்
வர்றேண்டா !
மடியில
வச்சிக்கிறேண்டா !
படிச்சி களைச்ச
பச்சப் புள்ளைக்கு !
பால் சோறு
தர்றேண்டா !
என்று
சொன்ன அம்மா
பேச்சைக் கேட்டு,
நடையில்
வேகம்
தளர விட்டு,
திரும்பி
திரும்பி
பார்த்து விட்டு,
பிஞ்சுக்
கையை
அசைத்து விட்டு,
உள்ளே
போன
பிள்ளை கண்டு,
கடந்து
சென்றால் கணத்த
இதயத்தில் தாய் !
நேரம்
மெல்லச்
செல்லச் செல்ல,
மூக்கில்
புகையும்
ஏற ஏற,
இருமி
இருமிக்
களைத்த பிள்ளை,
" ம்மா ... ம்மா ... "
எங்கே
நீ போனாயோ ?
என்னைத்தான்
விட்டு விட்டு !
கண்ணுந்தான்
எரிச்சலாச்சே !
காரணந்தான்
நெருப்பாச்சே !
கதறல்கள்
காலியாச்சே !
கைப்பிடித்த
தோழியுந்தான்
கரித் தூசியாச்சே !
இதோ
வர்றேன்னு
போனவளே !
சொல்லக்
கூட
நேரமில்லை !
தீப்பசிக்கு
தின்னு தீக்க,
எந்தேகம்
கிடைச்சிருச்சே !
எங்கேம்மா
நீ
போன ...
எனைத்
தீயில்
வேக விட்டு !
என்
உடம்பு
சுடுதம்மா !
சுட்டுச்
சுட்டுக்
கொதிக்குதம்மா !
கொதிச்ச
உடம்பு
கொப்புளமாச்சே !
கொப்புள
உடம்பு
விறகாச்சே !
இந்த
விறக
இன்னும் எறிக்க,
எதுக்கு
இத்தனை
விறகு அடுக்கு !
நீ
சொன்னபடி
கேட்டுக்கறேன் !
நீ
சொன்ன வேலை
செஞ்சு தர்றேன் !
வேண்டாம்மா ...
வேண்டாம்மா ...
எனக்கு
இன்னுமொரு
கூரைப் பள்ளிக்கூடம் !
Comments
Post a Comment