Skip to main content

யாகப் பூக்கள் ...


அழாதேடா
செல்லம் !

இன்னுமொரு
முத்தம் !

அதோ
கேளு மணிச்
சத்தம் !

மத்தியானம்
          வர்றேண்டா !

மடியில
          வச்சிக்கிறேண்டா !

படிச்சி களைச்ச
          பச்சப் புள்ளைக்கு !

பால் சோறு
          தர்றேண்டா !

என்று
சொன்ன அம்மா
பேச்சைக் கேட்டு,

நடையில்
வேகம்
தளர விட்டு,

திரும்பி
திரும்பி
பார்த்து விட்டு,

பிஞ்சுக்
கையை
அசைத்து விட்டு,

உள்ளே
போன
பிள்ளை கண்டு,

கடந்து
சென்றால் கணத்த
இதயத்தில் தாய் !

நேரம்
மெல்லச்
செல்லச் செல்ல,

மூக்கில்
புகையும்
ஏற ஏற,

இருமி
இருமிக்
களைத்த பிள்ளை,

" ம்மா ... ம்மா ... "

எங்கே
நீ போனாயோ ?

என்னைத்தான்
விட்டு விட்டு !

கண்ணுந்தான்
எரிச்சலாச்சே !

காரணந்தான்
நெருப்பாச்சே !

கதறல்கள்
காலியாச்சே !

கைப்பிடித்த
தோழியுந்தான்
கரித் தூசியாச்சே !

இதோ
வர்றேன்னு
போனவளே !

சொல்லக்
கூட
நேரமில்லை !

தீப்பசிக்கு
தின்னு தீக்க,

எந்தேகம்
கிடைச்சிருச்சே !

எங்கேம்மா
நீ
போன ...

எனைத்
தீயில்
வேக விட்டு !

என்
உடம்பு
சுடுதம்மா !

சுட்டுச்
சுட்டுக்
கொதிக்குதம்மா !

கொதிச்ச
உடம்பு
கொப்புளமாச்சே !

கொப்புள
உடம்பு
விறகாச்சே !

இந்த
விறக
இன்னும்  எறிக்க,

எதுக்கு
இத்தனை
விறகு அடுக்கு !

நீ
சொன்னபடி
கேட்டுக்கறேன் !

நீ
சொன்ன வேலை
செஞ்சு தர்றேன் !

வேண்டாம்மா ...
வேண்டாம்மா ...

எனக்கு
இன்னுமொரு
கூரைப் பள்ளிக்கூடம் !






Comments

Popular posts from this blog

நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
அப்பா நன்றி அப்பா ! எப்போதாவது  யாரிடமாவது  அறிமுகப்படுத்தும் போது மட்டும்  என்னோடு  பேசுவதற்கு ... நன்றி அப்பா ! முதன் முதலாய்  பிறந்ததால்  மூத்தவள் என்று  முடிசூட்டி, என்னை  மூலையில்  முடக்கி வைத்ததற்கு ... நன்றி அப்பா ! இளையவள் பிறந்த பின்பு  இல்லத்தில் ஏற்றம்  என்று  என் தங்கைக்கு மட்டும்  சிவப்புக் கம்பளம்  விரித்ததற்கு ... நன்றி அப்பா ! முழுமையான பெண்ணாக  நான் மலரும் போது  முனகிய படியே என்  கனவுகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்ததற்கு ... ஆனால் அப்பா ! எனக்குள் சில  ஆதங்கம் ... சரியான நேரத்தில்  முறையாக எனக்கு  போலியோ  போடப்பட்டிருந்தால் ... கைகளை ஊன்றி  உடலை இழுத்து  இழுத்து  இடம்பெயரும் , நிலை எனக்கு  இல்லாமல் போயிருந்தால் ... என்  ஊனம் கண்டு  உள்ளத்தில் எரிந்து  உங்கள் உதடுகள், என்  உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்  உதிர்க்காமல்  ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?