நன்றி
என் கல்லறைக்கு
வழிகாட்டிய, உன்
விழிகளுக்கு - நன்றி !
சின்னஞ் சிறிய வார்த்தையால்
நெஞ்சில்
சிவப்பு நீர்
வெளி நடப்பு செய்யாமல்
சிலுவை அறைந்தாய் - நன்றி !
உணர்வுகளைச் சாகடித்து என்
உயிருக்குள் கருவானாய் - நன்றி !
உள்ளம் முழுக்க
பள்ளம் தோண்டி அமர்ந்து
என் கண் முன்னே
கலைந்து போனாய் - நன்றி !
காத்திருந்து உனைக்
கண்ட கண்கள்
கண்ணீரால் கழுவிக்
கரைத்தாய் - நன்றி !
உன் வளையொலியில்
என் வாழ்வை ஒளித்தாய் - நன்றி !
எழுச்சிமிக்க இளைஞன்
நான் என
எனக்குள் நீ காட்டிய
பாதைக்கு - நன்றி !
ஒரே ஒரு முறை மட்டும்
உன்னைச் சந்திப்பேன் !
உயர்ந்த பிறகு நீ
உணர்த்திய
உயரத்தை நான்
அடைந்த பிறகு - நன்றி !
எழுச்சிமிக்க இளைஞன்
நான் என
எனக்குள் நீ காட்டிய
பாதைக்கு - நன்றி !
ஒரே ஒரு முறை மட்டும்
உன்னைச் சந்திப்பேன் !
உயர்ந்த பிறகு நீ
உணர்த்திய
உயரத்தை நான்
அடைந்த பிறகு - நன்றி !
Comments
Post a Comment