கட்டிப் போடு
உன்
நாவைக் கட்டிப் போடு !
உணர்வுகளையும்,
உன்னையும் சுமக்கும்
என் நெஞ்சில், நீ
உமிழ்ந்த வார்த்தைகள்
உதிரம் கொட்டச் செய்கிறது !
என்
ஆழ்மனதில் நீ
அடித்த ஆணி வார்த்தைகள்,
தூக்கத்தின் ஆழத்தையும்
துக்கப் படுத்துகின்றன !
உன்
நாவைக் கட்டிப் போடு !
உன்
ஒவ்வொரு பார்வையிலும்
நான் பிறக்கிறேன் !
உன்
ஒவ்வொரு வார்த்தையிலும்
நான் இருக்கிறேன் !
எனக்கு
பிறக்க மட்டுமே ஆசை
சிறப்பாய் உனக்காக மட்டும் !
உன்
வார்த்தைகளைத் தாங்க
வலுவில்லை
என் மனதில்,
ஆதலால் உன்
மௌனத்தின் கூக்குரல்
ஒலிக்கும் எப்போதும் !
Comments
Post a Comment