அறுவடை நாள்
அப்போதே
எனக்குத்
தெரியவில்லை !
உன்
நெடுங்கூந்தல்
நெருங்கி,
கழுத்தினில்
கவிழ்ந்து முகம்
புதைக்கும் போது
தெரியவில்லை
எனக்கு !
உன்
தசையாட்டத்தில்,
என்
விசையிழந்து,
சுகம்
பெரும் பொழுது
சுத்தமாய்த் தெரியவில்லை
எனக்கு !
ஆனால்
இப்பொழுது
திமிறிய - என்
தோள்களுக்கிடையில்,
திறந்த - என்
மார்பில்
எலும்புகள் மட்டும்
கூடு கட்டி
குவிந்த நிலையில் !
மேகத்தை
இழந்த
வானத்தைப் போல,
தசையில்லா
என்
தேகத்தில்,
தளர்ந்த
நரம்புகள்
அறுந்து போன
கயிறாய்
ஆடிய நிலையில் !
கறுத்துச்
சிவந்த - என்
கண்கள்,
கவிழ்க்கப்பட்ட
விளக்காய்
ஒளியிழந்த
நிலையில் !
இப்பொழுது
புரிகிறது
எனக்கு !
தாய்
எனக்கு
கொடுத்ததை
தாரத்திடம் பகிராமல்
தாசியிடம் பகிர்ந்ததற்க்கு !
இதோ !
என்
ஆன்மாவின்
அறுவடை நாள்
அதிக தூரமில்லை !
Comments
Post a Comment