பலி ...
அண்ணனும்
அழிக்கப்பட்டான் !
தம்பியும்
தாறுமாறாய்க்
கிழித்தெறியப்பட்டான் !
தங்கையின் முடிவும்
பிடி சாம்பலாய்
காற்றில் கரைந்தது !
குழந்தைகளோ !
குற்றுயிரும்
குறை உயிருமாய்
குதறப் பட்டார்கள் ...
மனைவியோ !
மல்லாந்த நிலையில்
மரணத்தைப்
பிரசவத்திருந்தாள் ...
தாய் தந்தையரோ !
தடுமாற்றத்தில்
தன்னிலை மறந்து
கிடந்தார்கள் ...
இந்திய தேசத்தின்
இன வெறியில்
இன்றைய பலி
என் குடும்பம் !
நாளை ...
Comments
Post a Comment