மனதை எழுப்பு
நினைவுகளைக் கொண்டு
நெஞ்சில் உழுதது போதும் !
விழிகளைக் கொண்டு
விடியும்வரை அழுதது போதும் !
நினைவுகளால்
நிரம்பும் மனம்
குமுறிக் குமுறிக்
கொப்பளிக்கும் !
வஞ்சொற்களை
வாங்கிய மனம்,
வதை பட்டு
வடு பட்டு
வாடி நிற்கும் !
நினைவுகள்
நெஞ்சின் நிழல்கள்,
நிஜமல்ல !
நினைவுகள்
செயல்களின்
சேமிப்புகள்
நிரந்தரமல்ல !
உருவமில்லா
வார்த்தைகளுக்கு
உயிர் கொடுத்து,
உள்ளத்தில்
சேமித்து - உன்னை
ஊனமாக்கியது போதும் !
எழுச்சிமிக்க
எண்ணகளால்,
மனதை
எழுப்புங்கள் !
ஏணி போன்ற
எதிர் காலத்தை நம்
எதிரில் வைக்கும் !
எண்ணங்களை
உற்று நோக்கு !
உயிர் கொடு
உன்னை அறிவாய் !
உறுதி பிறக்கும் !
இன்னல் இல்லை
இறுதி வரை !
Comments
Post a Comment