நினைவுகளுக்காக ...
என்
நெஞ்சுக்குழியை
வானமாய்த் தோண்டி,
உன்
சுடும் பார்வைகளை
கடும் பாறைகளாய்
இட்டு,
என்
கண்ணீரைத்
தண்ணீராய் நிரப்பி
உறுதியாய்,
என்
உள்ளத்தில்
எழுந்ததடி ,
உன்
கல்லறையின்
அஸ்திவாரம் !
நான்
கண்ட கனவுகளை
நான்கு பக்கச்
சுவர்களாக்கி,
கறுப்பு
உனக்கு
பிடிக்குமென்பதால் !
இரவையேத்
தரையாக்கி,
தென்றலையே
திரைச் சீலைகளாக்கி
இருக்கிறேன் !
என்
கூரிய புருவத்தையே
கூரையாக்கி,
என்
விழிகளையே
விளக்குகளாக்கி
இருக்கிறேன் !
உன்
விழிகளின்
வெளிச்சத்தில்,
என்
இதயத்தைக்
கொளுத்தியிருக்கிறேன்,
நறுமணத்திற்காக !
முகப்பில்
உன் உருவத்தை,
என்
உதிரத்தால்
தீட்டியிருக்கிறேன் !
என்
உயிரையே
அதற்குக்
காவலாக்கியிருக்கிறேன் !
என்
மரணம்
வரை பயணிக்கும்,
உன்
நினைவுகளின்
நீண்ட
உறக்கத்திற்கு,
நான்
எழுப்பிய
கல்லறை
இது !
Comments
Post a Comment