பெண் மனம்
எவனையும் பார்த்து
எதுவும் தோன்றவில்லை
இதுவரை எனக்கு !
உங்களைப் பார்த்த
பின்பு தான்
ஆசை என்பதற்கு
அர்த்தம் புரிந்தது !
நீ பேசும்
பொழுது தான்
ஸ்நேகம்
விளங்கியது !
நீ
பழகும் பொழுதுதான்
பரிவு புலப்பட்டது !
நீ
விலகும் போது தான்
மீண்டும் மீண்டும்
வேண்டும்
என்றிருந்தது !
நீ
நெருங்கும் போது தான்
வெட்கம் பிறந்தது !
நீ
அழைப்பிதழ் தரும் போது தான்
என் கனவுகளில்
கலைந்து சென்றாய்
நினைவுகளில்
நிலைத்து நின்றாய் !
என்
இருபது வருட
ஒழுக்கம்,
என்னை விட்டு
எட்டிச் சென்று,
கேலி செய்கிறது !
உணர்வுச் சிறைக்குள்
நான்
உயிர் விடும் போது !
Comments
Post a Comment