நெஞ்சினிலே
பத்து மாதம் கருவுக்குள்
என்னைப் புதைந்து, இந்த
பாரதத் தாய்க்கு,
பத்திரமாக என்னை
அறிமுகப்படுத்திய என் தாயே !
பதறாதே ! இதோ இன்னும்
இரு தினங்களில் உன்னுடன் !
எல்லை வீரன் இவன்,
தொல்லைகள் இருக்கும் எனத்
தெரிந்தும்
கவலைகளின்றி எனை மணந்து,
நாள்தோறும் தெருமுனையில், என்
வரவுக்காக காத்திருக்கும் - உன்
விதி முனைகளுக்கு
விருந்து வைக்க, அன்பே !
இன்னும்
இரு தினங்கள் மட்டுமே !
என் முகம் பாராமலே
வளரும் என் மகனே ! - உன்
பிஞ்சுப் பாதங்கள் நடக்க, என்
நெஞ்சினையே கொண்டு வருகிறேன்
இன்னும் இரு தினங்களில் !
இவ்வாறு
இமைய மலைச் சாரலில்
கடுங்குளிரில் காற்றையும்
கஷ்டமாக சுவாசித்துக் கொண்டு
தன் கண்களுக்குள் எல்லையைக்
காத்து நின்ற வீரன் ஒருவனின்,
காய்ந்து போன மனம்
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,
ஊடுருவல் என்ற பெயரில்
ஓடி வந்த ஒருவனின்
தோட்டாக்களைத் தன் மார்பில்
புதைத்துக் கொண்டு
முதன் முதலில் எல்லையை
மிதித்தவனை, தன் கத்தி
வீசி , அவன் இதயத் துடிப்புக்கு
விடுதலை அளித்து, அவனைத்
தாய் மண்ணுக்குக்
காணிக்கையாக்கி
தன் கைகளில்
குருதியேந்தி
எரிந்தவனின் மனம்,
பனியோடு பனியாக, அவன்
உயிர் கரைகின்ற வேளையில்,
தகப்பனை தவறவிட்ட தாயையும்,
தன்னை இழந்த தன் மனைவியையும்,
தன்னலம் மட்டும் விரும்பும்
இந்திய மக்களையும் நினைக்கையில்,
உயிரோட்டம் முடிந்த - அவன்
விழிகளில் துளிகளாய்
நீரோட்டம் !
கடுங்குளிரில் காற்றையும்
கஷ்டமாக சுவாசித்துக் கொண்டு
தன் கண்களுக்குள் எல்லையைக்
காத்து நின்ற வீரன் ஒருவனின்,
காய்ந்து போன மனம்
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,
ஊடுருவல் என்ற பெயரில்
ஓடி வந்த ஒருவனின்
தோட்டாக்களைத் தன் மார்பில்
புதைத்துக் கொண்டு
முதன் முதலில் எல்லையை
மிதித்தவனை, தன் கத்தி
வீசி , அவன் இதயத் துடிப்புக்கு
விடுதலை அளித்து, அவனைத்
தாய் மண்ணுக்குக்
காணிக்கையாக்கி
தன் கைகளில்
குருதியேந்தி
எரிந்தவனின் மனம்,
பனியோடு பனியாக, அவன்
உயிர் கரைகின்ற வேளையில்,
தகப்பனை தவறவிட்ட தாயையும்,
தன்னை இழந்த தன் மனைவியையும்,
தன்னலம் மட்டும் விரும்பும்
இந்திய மக்களையும் நினைக்கையில்,
உயிரோட்டம் முடிந்த - அவன்
விழிகளில் துளிகளாய்
நீரோட்டம் !
Comments
Post a Comment